தக்காளி சாதம்(Tomato rice)

மனம் மணக்கும் தக்காளி சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

  • உதிரியாக சாதம் - தேவையான அளவு,
  • தக்காளி - 5 பழம்,
  • வெங்காயம் - 3 எண்,
  • பச்சை மிளகாய் - 3 எண்,
  • கடுகு - 2 தேக்கரண்டி,
  • இஞ்சி பூண்டு பசை - 1 தேக்கரண்டி,
  • கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி,
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • சோம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • ஏலக்காய் - 2 தேக்கரண்டி,
  • கிராம்பு - 3 தேக்கரண்டி,
  • பட்டை - 2 துண்டு,
  • புதினா இலை - 1/2 கட்டு,
  • கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • எண்ணெய் - தேவையான அளவு,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்,
  • பின்பு பச்சை மிளகாயை நீளமாக கீறவும்,
  • கொத்தமல்லி மற்றும் புதினாவை நீரில் கழுவி,அதன் இலைகளை சிறிதாக நறுக்கவும்,
  • பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணையை காய விடவும்,
  • காய்ந்த எண்ணையில் கடுகு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு பசை,சோம்புத் தூள் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து தாளிக்கவும்,
  • பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்,
  • வதங்கிய பின் கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்,
  • பின்னர் இதை சாதத்துடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி விடவும்,
  • இப்பொழுது மனம் மணக்கும் தக்காளி சாதம் தயார்.

நன்மைகள்:

  • மூளை திறனை அதிகரிக்கிறது,
  • நோயெதிற்ப்பு முறையை பராமரிக்கிறது,
  • நீர் சத்தை அதிகரிக்கிறது.