அனைவருக்கும் பிடித்த பருப்பு சாதம் செய்வது எப்படி?
தேவையானவை:
- அரிசி - 1 கப்,
- பருப்பு - 1/2 கப்,
- எண்ணெய் - 2 தேக்கரண்டி,
- நெய் - 1 தேக்கரண்டி,
- கடுகு - 1 தேக்கரண்டி,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- மிளகாய் வத்தல் - 2 எண்,
- காயா போடி - 1/4 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிதளவு,
- வெங்காயம் - 1 எண்(நறுக்கியது),
- பூண்டு - 10 எண்(உரித்தது),
- தக்காளி - 1 எண்(நறுக்கியது),
- உப்பு - தேவையான அளவு,
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
- தண்ணீர் - 4 கப்,
- கொத்தமல்லி தழை - சிறிதளவு(நறுக்கியது).
செய்முறை:
- அரிசி மற்றும் பருப்பை களுவி வைத்து கொள்ளவும்,
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு,சீரகம்,மிளகாய் வத்தல்,கறிவேப்பிலை,வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்,
- பின்பு அதில் தண்ணீர் சேர்த்து அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்,
- அதன் பின் நெய்,காயப் பொடி,மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து அரிசி பதமாக வெந்த பின்னர் இறக்கவும்,
- இப்போது அனைவருக்கும் பிடித்த பருப்பு சாதம் தயார்.
நன்மைகள்:
- மலச்சிக்கலை தடுக்கிறது,
- மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது,
- உடலுக்கு சக்தியை தருகிறது.